» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 9:47:44 AM (IST)



பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி பெண்கள் கஞ்சிக்கலயம், தீச்சட்டி, முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். மகளிர் அணி ஒருங்கினைப்பாளர் சக்தி.பத்மாவதி தலைமையில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கினைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. 

அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை கழுகுமலை மன்ற தலைவர் அழகர் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இளையரசநேந்தல் மன்ற தலைவி கிருஷ்ணம்மாள், வண்டானம் மன்ற பொறுப்பாளர் அன்னத்தாய், எட்டயபுரம் புதிய மன்ற தலைவர் கன்னா, வானரமுட்டி நாறும்பூ  நாதன், முருகன், மன்ற பொறுப்பாளர்கள் ராஜேஷ்வரி, மாரிமுத்து, முருகேசன், சுப்புலெட்சுமி, வசந்தா, தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory