» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிரைவர் கைது

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:27:45 AM (IST)



தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து உத்தரவில் வேம்பார் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள்  வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் 32 மூட்டைகளில் மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்தம் 6,40,000 சிகரெட்கள் இருந்தன. இதன் மதிப்பு மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும். இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் கந்தசாமி இராஜேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory