» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிரைவர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:27:45 AM (IST)

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கடலோர காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து உத்தரவில் வேம்பார் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் 32 மூட்டைகளில் மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்தம் 6,40,000 சிகரெட்கள் இருந்தன. இதன் மதிப்பு மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும். இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் கந்தசாமி இராஜேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










