» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:22:26 AM (IST)
குளத்தூரில் வீட்டு படியில் தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுலோச்சனா என்ற மனைவி, சுபமாலினி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலையில் வீட்டிலிருந்த முத்துக்குமார் மனைவியிடம் தலைசுற்றுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீட்டிலிருந்த படிக்கட்டில் ஏறியபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் குளத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










