» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: பெண் உள்பட 3 பேர் கைது

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:07:47 AM (IST)

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான போலீசார் ஆறுமுக நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்ட விரோதமாக வாணவெடி தயாரிப்பது தெரிய வந்தது.

இது குறித்து, வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சண்முகசுந்தரம் (54), திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த சுவாமி மகன் செந்தில்குமார் (39), தென்காசி, குளகட்டாகுறிச்சியைச் சேர்ந்த முருகன் மனைவி செல்வி (50) ஆகியோர் சட்ட விரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory