» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: பெண் உள்பட 3 பேர் கைது
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:07:47 AM (IST)
கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான போலீசார் ஆறுமுக நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்ட விரோதமாக வாணவெடி தயாரிப்பது தெரிய வந்தது.
இது குறித்து, வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சண்முகசுந்தரம் (54), திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த சுவாமி மகன் செந்தில்குமார் (39), தென்காசி, குளகட்டாகுறிச்சியைச் சேர்ந்த முருகன் மனைவி செல்வி (50) ஆகியோர் சட்ட விரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










