» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை சார்பாக கைப்பந்தாட்ட அரங்கம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 9:31:21 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரின் முன்னெடுப்பின் படி காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கைப்பந்தாட்ட (Vollyball) அரங்கத்தை உருவாக்கினர்.

மேற்படி உருவாக்கப்ட்ட கைப்பந்து விளையாட்டு அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை பாராட்டி விளையாட்டு அரங்கத்தை தொடர்ந்து சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory