» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரு மொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:56:02 PM (IST)

இரு மொழி கொள்கை என்று வரும் போது மாநில கல்விக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தூத்துக்குடியில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக்கூட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 400 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் "SLAS 28 வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் இருக்கிறோம். பள்ளி வளாகம் முழுவதும் தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்தியாவில் யாரும் சிந்திக்காத திட்டத்தை நாம் செயல் படுத்தி வருகிறோம். நமது மாநிலத்தில் தான் ஆசிரியர்கள் அறம் சார்ந்து கல்வி கற்று கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கல்வியில் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வியும் மருத்துவமும் இருகண்கள் என்று முதல்வர் செல்வதேடு மட்டுமல்லாமல் செயல் படுத்தி வருகின்றனர் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு கொள்கை சார்ந்து எங்களை கையெழுத்து போடுங்கள், விட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது எங்களால் கண்டிப்பாக விட்டுக் கொடுக்க முடியாது. இரு மொழிக் கொள்கை என்று வரும் போது மாநில கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. இது மாநில உரிமையில் முக்கியமான உரிமை. இதை ஓர் காரணமாக வைத்துக் கொண்டு இதில் அரசியல் செய்வதாக கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 152 கோடி நிதி கடந்த ஆண்டும் கொடுக்கவில்லை.
இந்த ஆண்டும் ஆர்டிஏ நிதி ஆயிரத்து 800 கோடி தரவில்லை. இருந்த போதும் அதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆர்டிஏ 25 சதவீதத்திற்கு உண்டான பணத்தை நீங்கள் வழங்கிட வேண்டும் இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்படைவார்கள். இதனை உணர்ந்து உடனடியாக பணத்தை நீங்கள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
ஏற்கனவே 2 ஆயிரத்து 152 கோடி தரவில்லை என்று சொன்னால் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மாத சம்பளமாக இருந்தாலும் சரி, 43 லட்சம் மாணவர்கள் சார்ந்துள்ள பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் அதற்கான நிதியை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதி, நமது அரசு நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறது.
எப்படியானாலும் நாம் மத்திய அரசிடம் கேட்பது நமது பணம். நமது வரிப்பணம். அதை தாமதப்படுத்தக் கூடாது என்று கேட்கிறோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக 500 இடங்களில் வெற்றி பள்ளிகள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










