» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் பரிதாப சாவு
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:28:37 PM (IST)
தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி முத்தரசி (48). இவரது மகள் ஐஸ்வர்யா (30), பேத்தி காயத்ரி (5) ஆகிய மூன்று பேரும் கடந்த 1ம் தேதி ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
திருச்செந்தூர் ரோடுமுத்தையாபுரம் அருகே வரும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் முத்தரசி, அவரது மகள் ஐஸ்வர்யா பேத்தி காயத்ரி ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முத்தரசி இன்று காலை இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










