» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய் 6, மே 2025 5:42:10 PM (IST)



திருச்செந்தூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தட்டு பிரசாத ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கிராம தேவதை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு பால்குடம் திருவீதி உலா  நடந்தது. இதில் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடம் அணிந்து வந்தனர். காலை 9.30.மணிக்கு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 11 மணிக்கு திருக்கோவிலில் இருந்து தட்டு பிரசாதம் புறப்பாடு மதியம் 1 மணிக்கு அம்பாள் தாடகத்தி வேடத்தில் நகர்வலம் வருதல் நடந்தது. விழாவையொட்டி சபாபதிபுரம் தெரு திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் காலை டிபன், மதியம் 1மணி முதல் 3 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  


இரவு 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நள்ளிரவு இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும், நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்பாள் தங்க சப்பரத்தில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்பாள் சப்பரம் திருக்கோவில் சேர்க்கை 5 மணிக்கு படப்பு தீபாராதனை, படப்பு அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்கத்தினர்,  இளைஞர் பேரவையினர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory