» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
யாா் முட்டுக்கட்டையாக இருந்தாலும் மக்கள் பணி நடைபெறும் : மேயர் ஜெகன் பொியசாமி உறுதி
செவ்வாய் 6, மே 2025 3:14:37 PM (IST)

யாா் முட்டுக்கட்டையாக இருந்தாலும் மக்கள் நலனில் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டு பணியாற்றுவோம். மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று மேயர் தெரிவித்தார் தொிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 45, 50வது வார்டு பகுதி மக்கள் தங்களது பகுதிகளில் அடிப்படை பணிகளை செய்து தரவேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்தனா். இதணையடுத்து அதை நிறைவேற்றி கொடுத்த மேயர் ஜெகன் பொியசாமியை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நோில் சந்தித்து மாலை சால்வை அணிவித்து நன்றியும், பாராட்டுகளையும் தொிவித்துக்கொண்டனா்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் "மீளவிட்டான் ஊராட்சி பகுதியாக இருந்து கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது அதன்பின் 10 ஆண்டுகாலம் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று அப்பகுதியை சோ்ந்த மக்கள் சந்தித்து கோாிக்கை மனு அளித்தனா்.
அதில் பிரையண்ட்நகா் 13வது தெரு மேற்கு மற்றும் குறுக்கு சந்துகள், பாரதி நகா் 1, 2 ஆகிய பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, புதிய தாா்சாலைகள் அமைக்கப்பட்டும், பாதாள சாக்கடை இணைப்பும் வழங்கப்பட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தொிவித்தனா். திமுகவை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் தினசாி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களை பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா்.
அவரது வழியில் வந்த நாங்களும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60வது வார்டுகளிலும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் பணி செய்து வருகிறோம். தொடர்ந்து இந்த பணி நடைபெறும் அதற்கு யாா் முட்டுக்கட்டையாக இருந்தாலும் மக்கள் நலனில் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டு பணியாற்றுவோம். மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று தொிவித்தாா்.
திமுக வட்டச்செயலாளா்கள் சுரேஷ், சரவணன், ரவிந்திரன், துணை செயலாளர்கள் பக்கிாிசாமி, கணேசன், பகுதிசெயலாளா் ரவீந்திரன், கவுன்சிலர் முத்துவேல் மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்ட பிரதிநிதி சேவியா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










