» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செந்தியம்பலத்தில் சீரான குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை!

செவ்வாய் 6, மே 2025 12:26:12 PM (IST)

சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதியில் இருந்து சீராக தண்ணீர் அளிக்கப்படவில்லை. சாயர்புரம் இஞ்ஞினியரிங்க கல்லூரி எதிர்ப்புறம் உள்ள போரில் இருந்து வரும் தண்ணீர் இப்பகுதிக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு மோட்டார் மூலம் தண்ணீர் அளிக்கப்பட்டால் தான் இப்பகுதியில் தண்ணீர் சீராக விநியோகிக்கபடும்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகத்திற்கு கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கபடவில்லை. மேலும் இந்த பகுதியோடு சேர்ந்த நம்மாழ்வார் நகரில் கடந்த  ஆறு நாளாக தண்ணீர் விடபடவில்லை. கடந்த 10 வருடமாக புதிய மேல் நிலைதேக்க தொட்டி வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அலைந்து கடும் சிரமங்கள் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தங்கம்மாள் புரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அளித்த மனுவிற்கு இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் சீரான குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory