» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அலங்கார நீரூற்று தொட்டிக்குள் தவித்த 10 மாடுகள் மீட்பு: தீயணைப்பு படையினர் நடவடிக்கை!

செவ்வாய் 6, மே 2025 11:47:51 AM (IST)



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் அலங்கார நீரூற்று தொட்டிக்குள் இறங்கி வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுகப் பகுதியில் ஏராளமான பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுகள் சுற்றித் திரிகின்றனர். கோடை வெப்பம் காரணமாக அங்குள்ள அலங்கார நீரூற்று தொட்டியில் இறங்கி விடுகின்றன. இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் 10க்கும் மேற்பட்டமாடுகள் தவித்தன. 

இது குறித்து தகவல் அறிந்து வஉசி துறைமுக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தொட்டிக்குள் இருந்த மாடுகளை கயிறு கட்டி வெளியே இழுத்து வெளியே கொண்டு வந்தனர். கால்நடை வளர்ப்போர் கோடை காலங்களில் அதற்குத் தேவையான தண்ணீர் வைத்து அதைப் பாதுகாப்பான இடங்களில் வளர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று வஉசி துறைமுக அதிகாரிகள் ஊழியர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory