» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அலங்கார நீரூற்று தொட்டிக்குள் தவித்த 10 மாடுகள் மீட்பு: தீயணைப்பு படையினர் நடவடிக்கை!
செவ்வாய் 6, மே 2025 11:47:51 AM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் அலங்கார நீரூற்று தொட்டிக்குள் இறங்கி வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகப் பகுதியில் ஏராளமான பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுகள் சுற்றித் திரிகின்றனர். கோடை வெப்பம் காரணமாக அங்குள்ள அலங்கார நீரூற்று தொட்டியில் இறங்கி விடுகின்றன. இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் 10க்கும் மேற்பட்டமாடுகள் தவித்தன.
இது குறித்து தகவல் அறிந்து வஉசி துறைமுக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தொட்டிக்குள் இருந்த மாடுகளை கயிறு கட்டி வெளியே இழுத்து வெளியே கொண்டு வந்தனர். கால்நடை வளர்ப்போர் கோடை காலங்களில் அதற்குத் தேவையான தண்ணீர் வைத்து அதைப் பாதுகாப்பான இடங்களில் வளர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று வஉசி துறைமுக அதிகாரிகள் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










