» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்
செவ்வாய் 6, மே 2025 10:48:37 AM (IST)
தூத்துக்குடியில் மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி சோரீஸ்புரம், மாதவன் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் யுவராஜா (31), இவர் தனியார் கம்பெனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று குடும்பத் தகராறு காரணமாக மனைவி 2 குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனவேதனையடைந்த யுவராஜா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










