» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற 1540 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : தூத்துக்குடியில் ஒருவர் கைது!

செவ்வாய் 6, மே 2025 8:42:03 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 1540 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடியில் முத்தையாபுரம் தனி பிரிவு காவலர் ஜான்சன், மத்திய பாகம் தனி பிரிவு காவலர் சாமுவேல் ஆகிய இருவரும் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து செல்லும் போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்க்கு எடுத்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த தாளமுத்துநகர் சோட்டையன் தோப்பு அருகில் பூபாண்டியபுரம் 2வது தெரு ராஜா மகன் சடைய மாரியப்பன் (23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 1540 கிலோ பீடி இலைகளுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory