» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்: 2 பேர் கைது
திங்கள் 5, மே 2025 9:15:36 AM (IST)
சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிங்கத்தாகுறிச்சி அருகே வசவப்பபுரம் செல்லும் சாலையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் இரவு வாகனச் சோதனை நடத்தினர். ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 114 மது பாட்டில்கள் இருந்தன.
இதுதொடர்பாக, பைக்கில் வந்த சிங்கத்தாகுறிச்சி முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் (36), சுடலை மகன் தேவராஜ் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பெங்களூரிலிருந்து ரயிலில் திருநெல்வேலிக்கு கடத்தி வந்து, அங்கிருந்து பைக்கில் கொண்டுவருவதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










