» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்: 2 பேர் கைது

திங்கள் 5, மே 2025 9:15:36 AM (IST)

சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சிங்கத்தாகுறிச்சி அருகே வசவப்பபுரம் செல்லும் சாலையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் இரவு வாகனச் சோதனை நடத்தினர். ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 114 மது பாட்டில்கள் இருந்தன.

இதுதொடர்பாக, பைக்கில் வந்த சிங்கத்தாகுறிச்சி முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் (36), சுடலை மகன் தேவராஜ் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பெங்களூரிலிருந்து ரயிலில் திருநெல்வேலிக்கு கடத்தி வந்து, அங்கிருந்து பைக்கில் கொண்டுவருவதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory