» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி

திங்கள் 5, மே 2025 9:06:35 AM (IST)



தூத்துக்குடி கடல் பகுதியில் கேரளா, கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்கும் வகையில் மீன்வளத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது, கேரள மாநிலத்திலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தும் மீன்பிடி விசைப் படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் தொழில் புரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கேரள மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்களும் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்- மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன் தலைமையில் 2 விசைப்படகுகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை ரோந்துப் பணி நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அலுவலர்கள், கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழு அலுவலர்கள், 7 மீனவப் பிரதிநிதிகள் ஈடுபட்டதாக மீன்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory