» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் அசன விருந்து : திரளானோர் பங்கேற்பு
திங்கள் 5, மே 2025 8:48:21 AM (IST)

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் 112 வது ஆண்டு அசன சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமை வகித்தார். பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் நவராஜ் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் நாசரேத், பிரகாசபுரம், மணிநகர், மாதாவனம், மூக்குப்பீறி, ஞானராஜ் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் நற்கருணை ஆசீர் நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் இறை மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










