» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் அசன விருந்து : திரளானோர் பங்கேற்பு

திங்கள் 5, மே 2025 8:48:21 AM (IST)



நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் 112 வது ஆண்டு அசன சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமை வகித்தார். பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் நவராஜ் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

இதில் நாசரேத், பிரகாசபுரம், மணிநகர், மாதாவனம், மூக்குப்பீறி, ஞானராஜ் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் நற்கருணை ஆசீர் நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் இறை மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory