» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 110-வீடுகள் கட்டும் பணி: மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஞாயிறு 4, மே 2025 4:05:47 PM (IST)



கே.சுந்தரேஸ்வரபுரத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 110-வீடுகள் கட்டும் பணியை மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி  ஒன்றியம், கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 110-வீடுகள் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கிளைச் செயலாளர் தங்கராஜ்பாண்டியன், கிளை பிரதிநிதி பெருமாள், வார்டு செயலாளர் மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory