» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை: கடன் பிரச்சனையால் சோகம்!

வியாழன் 6, பிப்ரவரி 2025 12:28:07 PM (IST)

ஆத்தூரில் மகனின் கடன் பிரச்சனையால் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் ராஜகோபால் (72). இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரகாஷ் அதிகளவில் கடன் வாங்கியிருந்தாராம். கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு ராஜகோபாலிடம் வற்புறுத்தினார்களாம். 

இதனால் மனவேதனையடைந்த ராஜகோபால் நேற்று தனது கடையில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory