» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் : 4பேர் கைது!

வியாழன் 6, பிப்ரவரி 2025 10:48:44 AM (IST)



தூத்துக்குடியில் காரில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில், நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், தனிப்படை தலைமை காவலர்கள் முத்துச்சாமி ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு சத்யா நகர் மேம்பாலம் அருகே வாகன சோனதையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக காரில் வந்த தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த கோபிநாத் மகன் காந்தி (21), தேவர் காலனியைச் சேர்ந்த சின்னபாண்டியன் மகன் மகேஷ் செல்வம் (35), வீரபுத்திரன் மகன் வசமுத்து (23), கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாம மகன் கோவிந்தராஜன் (29)ஆகிய 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், 4 செல்போன், மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory