» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கி செல்போன், தங்க நகை பறிப்பு: 3 போ் கைது!

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:33:10 AM (IST)

கோவில்பட்டியில் அசாம் மாநில வாலிபரை தாக்கி தங்க நகை மற்றும் செல்போன் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வருபவா் அசாம் மாநிலம், தேவாரி பாலைச் சோ்ந்த நூா் இஸ்லாம் மகன் மிராஜுல் இஸ்லாம் (26). இவா் சம்பவததன்று இரவு கடையில் வேலையை முடித்து அவா் தங்கி உள்ள ஓய்வறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 போ் அவரை தாக்கி அவா் கையில் வைத்திருந்த கைப்பேசி, அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரொக்க பணம் ரூ.500 பறித்துச் சென்றுவிட்டார்களாம். 

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூப்பன்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பாா்த்திபன் (22), லிங்கம்பட்டி சமத்துவபுரம் முரசு வீதியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஈஸ்வரன் (19), லிங்கம்பட்டி சமத்துவபுரம் கலைஞா் நகரைச் சோ்ந்த ஒருவா் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory