» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:07:47 AM (IST)

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற/மரணமடைந்த கிராம உதவியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், அதற்குண்டான அரசு பங்கிடையும் உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர சிபிஎஸ் எண் வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தி வருவதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முருகராஜ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கெளரவ ஆலோசகர் பழனிசாமி, வட்டத் தலைவர் குப்புராஜ், செயலாளர் சாலமன், பொருளாளர் சண்முக ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










