» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:07:47 AM (IST)



விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராம உதவியாளர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற/மரணமடைந்த கிராம உதவியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், அதற்குண்டான அரசு பங்கிடையும் உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர சிபிஎஸ் எண் வழங்க வேண்டும். 

கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தி வருவதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முருகராஜ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கெளரவ ஆலோசகர் பழனிசாமி, வட்டத் தலைவர் குப்புராஜ், செயலாளர் சாலமன், ‌ பொருளாளர் சண்முக ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory