» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் : 25 பேர் கைது

வியாழன் 6, பிப்ரவரி 2025 7:59:30 AM (IST)

தூத்துக்குடியில்  பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு மாவட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமையில் பட்ஜெட் நகலை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தென்பாகம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory