» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்பு : விசைப்படகை மீட்கும் பணி தீவிரம்

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:37:57 PM (IST)



தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து அந்தோணி ராஜ் என்பவரது விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிக்க கடந்த 1ஆம் தேதி 6 மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் திருச்செந்தூருக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென படகில் ஏற்பட்ட பழுது காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து விசைப்படகு மூழ்கத் துவங்கியுள்ளது.

இதை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீட்டு தங்களது விசைப் படகில் ஏற்றி மீட்டு வந்துள்ளனர். மேலும், வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பத்திரமாக தங்கள் படகில் ஏற்றி உதவி உள்ளனர். இதைத் தொடர்ந்து மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory