» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்பு : விசைப்படகை மீட்கும் பணி தீவிரம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:37:57 PM (IST)

தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து அந்தோணி ராஜ் என்பவரது விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிக்க கடந்த 1ஆம் தேதி 6 மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் திருச்செந்தூருக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென படகில் ஏற்பட்ட பழுது காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து விசைப்படகு மூழ்கத் துவங்கியுள்ளது.
இதை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீட்டு தங்களது விசைப் படகில் ஏற்றி மீட்டு வந்துள்ளனர். மேலும், வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பத்திரமாக தங்கள் படகில் ஏற்றி உதவி உள்ளனர். இதைத் தொடர்ந்து மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










