» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 6ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:06:32 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11 கிவோ அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீர் ஹுசைன் நகர், ராஜபாளையம், மாதா நகர், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழ அலங்கார தட்டு, சவேரியார் புரம், அய்யர் விலை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி,வெள்ளபட்டி, பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள் புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல் புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர் விளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory