» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)

தூத்துக்குடியில் போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மகன் தடிகாரன் (எ) கரும்பன் (62). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்கு நிலுவையில் இருந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போக்சோ  நீதிமன்றத்தில் வர இருந்தது.

இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

SivaSriFeb 4, 2025 - 02:15:27 PM | Posted IP 172.7*****

குழந்தைகளுக்கு 0முதல் 18வரை எதிராக துரோகம் செய்பவர்களுக்கு வன்முறை சட்டம் பாயும் அதுவும் போக்ஸோ சட்டம் Pocso Act இனி போஸ்கோன்னு அச்சிட வேண்டாம்.just change.

அருணாசலம் திருநவேலிFeb 4, 2025 - 02:04:28 PM | Posted IP 172.7*****

போக்சோ Pocso

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory