» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நலவாரியங்கள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:51:11 AM (IST)



தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நலவாரியம் தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களின் நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சாமி கதிர்வேல் கலந்து கொண்டு அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் நலன் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் , தொழிலாளர் உதவி ஆணையர் கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் , அரசு அலுவலர்கள், நிர்வாகத் தரப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory