» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:41:38 AM (IST)

கோவில்பட்டி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனார் ஊத்து கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் கொம்பையா (57). இவர் தினசரி மது போதையில் வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி சுப்புத்தாய் கண்டித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கில் தாெங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory