» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்குவாரி குட்டையில் மிதந்த பெண் சடலம் : போலீசார் விசாரணை

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:32:49 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி குட்டையில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலம் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரி குட்டையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடைப்பதாக ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அந்த பெண் உடலை பரிசோதனைக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. இறந்து கிடந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காாரணம் உள்ளதா என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory