» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவனை கத்தியால் தாக்கியதாக 2பேர் கைது

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:09:57 AM (IST)

கோவில்பட்டியில் முன் விரோத்தில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக மற்றொரு சிறுவன் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமம் 4ஆவது தெருவைச் சேர்ந்த கு. மாரிமுத்துவின் மகன்கள் சங்கரநாராயணன், பாண்டீஸ்வரன் (14). சங்கர நாராயணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வென்னிமலை மகன் வேலு என்ற முனியசாமிக்கும் கடந்த தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாம்.

இந்நிலையில், அங்குள்ள அம்மன் கோயில் அருகே பாண்டீஸ்வரன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வேலு உள்ளிட்ட மூவர் வந்து, பாண்டீஸ்வரனின் அண்ணனால்தான் பிரச்னை ஏற்பட்டது எனக் கூறியதுடன், அச்சிறுவனை வேலு கத்தியால் தாக்கினாராம். இதைப் பார்த்த அப்பகுதியினர் கண்டித்ததும் அந்த 3 பேரும் பாண்டீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம். 

இதில், காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவன், புதுகிராமம் ஓடைத் தெரு முருகேசன் மகன் முத்துப்பாண்டி (19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். வேலுவை போலீசார் தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory