» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவலர் குடியிருப்பில் 10 பவுன் நகைகள் திருட்டு: வாலிபர் கைது
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 8:27:24 AM (IST)
விளாத்திகுளத்தில் காவலர் குடியிருப்பில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள வேம்பார் சாலையில் சட்டம் -ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. இவற்றின் பின்புறமுள்ள காவலர்கள் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
விளாத்திகுளம் காவலர் செந்தில்முருகன் 4ஆவது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 16ஆம் தேதி சொந்த ஊரான மேலக்கல்லூரணியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றார். அடுத்த நாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் அவர் வந்துபார்த்தபோது, மர்ம நபர்கள் கதவின் பூட்டு, பீரோவின் லாக்கர் ஆகியவற்றை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
3ஆவது மாடியில் வசிக்கும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் கிருபாவின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு எதுவும் திருடுபோகவில்லை. புகாரின்பேரில் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் ஜி. முருகன் வழக்குப் பதிந்தார். தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பதிவாகியிருந்த சந்தேக நபர் சம்பவ நாளின்போது விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, கூகுள் பே மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது. அந்தக் கைப்பேசி எண்ணைக் கண்காணித்ததில், அந்த நபர் ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாபதி (32) எனத் தெரியவந்தது.
அவர் சாயல்குடியில் உள்ள முடி திருத்தகத்தில் வேலை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் சென்று அவரைக் கைது செய்து, விளாத்திகுளத்துக்கு அழைத்து வந்தனர்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு, தேவிபட்டணம், திருப்பூர், பல்லடம், கோவை என பல்வேறு இடங்களில் உள்ள காவலர் குடியிருப்புகளைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீஸார் கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










