» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்!
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:46:39 PM (IST)

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சாயர்புரம் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் இந்த ஆகஸ்டு மாதங்களில் ஆண்டுதோறும் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இப்பகுதியின் பிரதான திருவிழாவாகும்.
இந்நிலையில் சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம் பகுதியில் சில இடங்களில் வயர்கள் தாழ்வாரமாகவும் மற்றும் இரண்டு கம்பங்களுக்கு இடையே அரசு மின்வாரிய சட்டத்தை மீறி அதிகம் தூரம் முக்கியமான பகுதியில் இருந்தது.பல வருடங்களாக சேர்வைக்காரன்மடம் புதுமனை தெருவில் கோவில் சப்பரம் வரும்போது வயர்கள் தாழ்வாக செல்லும் போது அதன் மேலேயேயும் மற்றும் இப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது உரசும் நிலையில் இருந்தது.
இதனை ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா நேற்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்-க்கும் மற்றும் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா-க்கும் மின் வாரிய அதிகாரி ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் செயற்பொறியாளர் அவர்களுக்கும் இந்த ஆபத்தான பழூதான மின் கம்பங்களை மாற்றவும் தாழ்வாரமான இடங்களில் செல்லும் வயர்கள் உள்ள பகுதியில் கூடுதல் மின்கம்பம் நட்டவேண்டும் எனவும் பலவருடங்களாக நிலவி வரும் இந்த பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் இந்த திருவிழா காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்து அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று நிலமையை அவர்களிடம் எடுத்து கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் இப்பணியை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினார். மின் வாரிய அதிகாரிகளின் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் பேரில் உடனடியாக மனு அளித்து வலியுறுத்திய பகுதிகள் கூடுதல் மின் கம்பம் நிறுவப்பட்டும் மேலும் பழுதடைந்த கம்பம் மாற்றப்பட்டது.
ஊராட்சி பொதுமக்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மின வாரிய உயர் அதிகாரி ஜெயக்குமார் சார் மற்றும் சாயர்புரம் செயற்பொறியாளர், மற்றும் மின பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டாவுக்கு நன்றி தெரிவித்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










