» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன் வியாபாிகள் 3பேருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பயங்கரம்!
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 8:56:15 PM (IST)
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாிகள் 3பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (55), கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் பிச்சையா மகன் சுடலைமணி (40), தாமோதரன் நகரை சேர்ந்தவர் உசேன் மகன் எட்மண்ட் (52) இவர்கள் 3பேரும் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை ஏலம் எடுத்து தெருத் தெருவாக கொண்டு சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு மீன்பிடி துறைமுகத்தில் 3பேரும் மீன்களை ஏலம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தூத்துக்குடி சுந்தரம்மாள் புரத்தைச் சேர்ந்த மரியதாஸ் மகன் வினோத் (50), மற்றும் 3பேர்கள் சேர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டு 3 பேருடன் தகராறு செய்தனர்.
இந்த தகராறில்ஆத்திரம் அடைந்த வினோத் மற்றும் 3பேரும் சேர்ந்து ஹரி கிருஷ்ணன், சுடலைமணி, எட்மெண்ட் ஆகிய 3பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள், இதில் 3பேரும் பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










