» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:47:38 AM (IST)

குலசேகரப்பட்டினம் அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி மியான் மகன் சகாப் உசேன் (29), இவர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வெல்டராக காண்டாக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி விடுமுறையில் பீகாருக்கு சென்றவர் 20 ஆம் தேதி கல்லாமொழிக்கு வந்தாராம். வந்ததிலிருந்து சரியாக வேலை செய்யாமல் சோகமாக இருந்தாராம். 

மேலும் தனது நண்பர்களிடம் பீகாரில் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகும் அவள் திருமண செய்ய மறுத்து விட்டதால் எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று கூறினாராம். இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory