» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆடிட்டரிடம் செல்போன் பறிப்பு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:36:40 AM (IST)

கோவில்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி ஆடிட்டரிடம் செல்போன் பறித்த 4பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவடி தங்கம் மகன் கண்ணன் (47), ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று சென்று கொண்டிருந்த போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் இவரை கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துசென்று விட்டார்களாம். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory