» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூதாட்டியிடம் நகை பறித்த 3 பேர் கைது: பைக் பறிமுதல்!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:28:41 AM (IST)



நாலாட்டின்புத்தூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தாய் (90). தற்போது உறவினர் சுப்புலட்சுமி (65) வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் சின்னத்தாய் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சின்னத்தாய் காதில் அணிந்திருந்த கம்மலை திருடிச் சென்றனர். 

இதையறிந்த மூதாட்டி, சுப்புலட்சுமியிடம் கூறினார். இதுகுறித்து சுப்புலட்சுமி நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை நாலாட்டின்புத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த மகாராஜன் மகன் குமார் (47), கோவில்பட்டி கடலையூர் ரோடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (29), வெள்ளாளங்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (50) என்பதும், சின்னத்தாயிடம் நகை பறித்தும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory