» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை பொருள் இல்லாத தமிழகம் : மதர் தெரசா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 9:50:13 AM (IST)



செயின்ட் மதர் தெரசா கல்லூரியில் போதையில்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் மதர் தெரசா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

தமிழகத்தில் போதையில்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மகளிர் காவல்துறை ஆய்வாளர் வனிதா ஹரிஹரன் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். 

போதை பொருள் பயன்படுத்துவதால் விளையும் தீமைகளை பற்றியும், உயர்கல்வியில் வெற்றிபெற்று வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று அறிவுத்தினார். இதனையடுத்து, மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பேராசிரியர் ராமசாமி ரீகன் மற்றும் நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து

படித்த முட்டாள்Aug 17, 2024 - 12:14:45 PM | Posted IP 162.1*****

ஒயின் ஷாப்ல என்ன விற்கிறாங்க, அதை வாங்கி குடிக்கலாமா? உடம்புக்கு நல்லதா? அதையும் சேர்த்து சொல்லுங்களேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory