» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுதந்திர தினவிழாவில் எழுத்தாளர்கள் கௌரவிப்பு

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 3:17:04 PM (IST)



தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் லட்சுமிபதி  எழுத்தாளர்களை கௌரவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தேசிய கொடியை ஏற்றி வைத்து 51 பயனாளிகளுக்கு 1,14,79,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 228 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

இந்த வருடம் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக மேடையில் அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில்  மூத்த எழுத்தாளர்கள் கலாபன் வாஸ், கோணங்கி, தேச தட்சன், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory