» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் சுதந்திர தின விழா: இந்திய வரைபடத்தில் அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 12:30:37 PM (IST)



கோவில்பட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் இந்திய வரைபடத்தில் தேசத் தலைவர்களின் மாஸ்க் அணிந்து மாணவர்கள் அணி வகுத்து நின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்திய வரைபடத்தில் பாரதியார்,  வ.உ.சி, நேரு, வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ், காந்தி,  காமராஜர் ஆகியோரின் மாஸ்க் அணிந்து அணிவகுத்து நின்றனர். பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். 

பள்ளி முன்னாள் மாணவர் முத்து முருகன், பள்ளிக் குழு உறுப்பினர் மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் நாடார் உறவின்முறைச்சங்க உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory