» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை: தூத்துக்குடி அருகே பரிதாபம்!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 11:48:22 AM (IST)

தூத்துக்குடி அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவெளி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் மனைவி மாரிசெல்வி (38), இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. பலவேசம் தினசரி மது போதையில் வீட்டுக்கு வருவாராம். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். 

இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாரிசெல்வி தனது வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் உற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory