» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் முன்னிலை வைத்தார். அரசியல் ஆலோசனை குழு செயலாளர் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முருகபூபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் தர்மம், நிர்வாகிகள் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட தலைவர் பேச்சி ராஜா, பொருளாளர் காயல் அமுலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி, சரவணன், மணி, பிஎஸ் முருகன், ஜெயக்கொடி, இக்பால், ராஜ்குமார், நக்கீரன், பொன்ராஜ், மகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











PEOPLESAug 14, 2024 - 03:58:57 PM | Posted IP 172.7*****