» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெல்டர் அடித்துக் கொலை: மது போதையில் வாலிபர் வெறிச்செயல்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:21:50 AM (IST)

தூத்துக்குடியில் வெல்டரை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காமராஜர் நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் மாரியப்பன் (42). இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வண்டி பேட்டையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் மது போதையில் ஒருவர் தகராறு செய்துள்ளார். இதனை மாரியப்பன் தட்டிக்கேட்டாராம். 

இதனால் ஆத்திரம் அடைந்த  போதை ஆசாமி, மாரியப்பனை கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மததியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை வழக்குப் பதிந்து, திம்மராஜ புரத்தைச் சேர்ந்த அந்தாோணி சாமி மக்ன பால்ராஜ் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

தமிழன்Aug 14, 2024 - 12:45:17 PM | Posted IP 162.1*****

காரணம் அரசு சத்து டானிக் - டாஸ்மாக், குடி , மதுபானம் இது தான் திராவிட மாடல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory