» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செவ்வாய் 11, ஜூன் 2024 4:02:33 PM (IST)

கோவில்பட்டியில் ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய்1000 வீதம் 31 மாணவர்களுக்கும், முதலிடம் பெற்றவருக்கு ரூபாய்5000 மற்றும் நினைவு பரிசும், 2ம் இடம்பெற்றவருக்கு ரூ 3000மற்றும் நினைவு பரிசும், 3ம் இடம் பெற்றவருக்கு ரூ 2000 மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இன்ஜினியர் மாரிக்கண்ணன், மேனாள்சுகாதார ஆய்வாளர்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜோதிடர் அருணாசலம் அனைவரையும் வரவேற்றார். இதில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜான்கணேஷ், பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தமிழாசிரியர்கள் முருகசரஸ்வதி, சசிகலா ஆகியோர் சிறப்பிடம் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர்.
இதில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், தினேஷ் பாலாஜி, அருள் ஜெயராஜ், உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
