» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் மோதி வாலிபர் காயம் : டிரைவர் கைது!

செவ்வாய் 11, ஜூன் 2024 10:36:53 AM (IST)

தூத்துக்குடியில் உணவத்திற்குள் கார் புகுந்த விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா மகன் இசக்கி குமார் (23). இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் விக்னேஷ் என்ற விக்கி பாண்டி (25) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று அவர் போதையில் ஓட்டிவந்த கார் இசக்கி குமாரின் டிபன் சென்டரில் மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் கொலை முயற்சி வழக்குப் பதிந்து  விக்னேஷ் என்ற விக்கி பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory