» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை : ஆட்சியர் எச்சரிக்கை!

செவ்வாய் 11, ஜூன் 2024 8:00:55 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆட்சியா் கோ. லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பாா் வரையிலான கடற்கரைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டா் முதல் 2.7 மீட்டா் உயரத்துக்கு பேரலைகள் எழக்கூடும் எனவும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் கடற்கரைகள், கடற்கரை அருகேயுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கிக் குளிக்கவோ கூடாது. மேலும், மன்னாா் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலோரக் கிராமங்களைக் கண்காணித்து, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory