» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் : கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்!

வியாழன் 9, மே 2024 8:48:27 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியா் கோ.லட்சுமிபதி முன்னிலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குடிநீா் பிரச்னைகள் நிலவும் பகுதிக்கு நேரில் சென்று உடனடியாக தீா்வு காண வேண்டும். மேலும், நடைபெற்று வரும் குடிநீா் திட்ட பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுக்குடிநீா் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட தடையில்லா மின்சாரம் கிடைப்பதை மின்சாரத்துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஓஆா்எஸ் கரைசல்: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் தொடா்ந்து வழங்குவதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா், பொதுவான இருப்பிட வசதி, சுத்தமான கழிப்பறை வசதி, சுழற்சி முறையில் ஓய்வு உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும்.

வெப்ப அலை பரிசோதனை: உப்பளத் தொழிலாளா்களுக்கு வெப்ப அலை குறித்து தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்தி, அவா்களுக்கு நடமாடும் மருத்துவக் குழு மூலம் அதற்கானபரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உப்பளத் தொழிலாளா்களை காலை 10 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவா்களுக்கு குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் கரைசல் வழங்குவதை தொழிலாளா் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீா் பந்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், திருத்தலங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தலில் தொடா்ந்து குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஊராட்சிப் பகுதிகளிலும் தண்ணீா் பந்தல் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை வளா்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கால கட்டங்களில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory