» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது

புதன் 8, மே 2024 8:58:57 AM (IST)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டூவிபுரம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேலப்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்த முருகன் மகன் கோபிநாத் (29) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.5 ஆயிரத்து 150 மற்றும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory