» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கிய சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

புதன் 8, மே 2024 8:46:47 AM (IST)

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில்  வாலிபரை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் தவசி மகன் சுடலை (45). இவரும் அதே ஊரைச் சோ்ந்த மனோகா் மகன்கள் சேகா் (40), ஆனந்த் (38) ஆகியோரும் உறவினா்கள். சம்பவத்தன்று சுடலை, சேகா், ஆனந்த் மற்றும் அதை ஊரைச் சோ்ந்த சுடலை மகன் பொன்பாண்டி (35) ஆகிய 4 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

அப்போது சுடலை, சேகா் மற்றும் ஆனந்த் ஆகியோரது சகோதரியை அவதூறாகப் பேசியதாக தெரிகிறது. இதை அவா்கள் கண்டித்தனராம். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சேகா், ஆனந்த் மற்றும் பொன்பாண்டி ஆகிய மூவரும் சோ்ந்து சுடலையை தாக்கினாா்களாம். இதில் காயமடைந்த சுடலை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுடலை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து, சேகா், ஆனந்த் மற்றும் பொன் பாண்டி ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory