» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா: அன்னதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 7, மே 2024 4:56:40 PM (IST)
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கொடைவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, கமிட்டி உறுப்பினர்கள் கணேஷ் காந்தகுமார், அருணகிரி, சிவசுந்தர், பெரியசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், சண்முகசுந்தரம், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.