» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி கனவு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 7, மே 2024 4:01:06 PM (IST)
தூத்துக்குடியில் 11ம் தேதி நடைபெற உள்ள "கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் வருகின்ற 11.05.2024 அன்று நடத்தப்படவுள்ள மாபெரும் "கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.