» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

செவ்வாய் 7, மே 2024 12:22:49 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அரசு பள்ளி அளவில் 582 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 433 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி குருநந்தினி 482 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார்.

மாணவி கனிகா 569 மதிப்பெண்களும்,மாணவி ஹரிணி 557 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதில் 4 மாணவிகள் தலா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவிதம் 94% ஆகும். 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா சாதனை படைத்த மாணவிகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவிகளை பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory